பாடசாலை சென்ற மாணவனை மோதிய உழவு இயந்திரம்; சிறுவன் பலி!

பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவனை உழவு இயந்திரம் மோதியதில் 8 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் இன்று காலை அம்பாறை – அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.